Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிமுக கூட்டணி வேட்பாளரின் வெற்றியை பறிக்கும் வகையில் உள்ளது : ஜெயக்குமார்

ஏப்ரல் 17, 2019 11:22

சென்னை: வேலூர் மாவட்டம் காட்பாடி உள்ளிட்ட பகுதிகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து,  வேலூர் தொகுதி மக்களவை தேர்தல் ரத்து செய்யப்படுவதாக நேற்று அறிவிப்பு வெளியானது. 

இந்த நிலையில், தேர்தல் ரத்து தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், ”இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் கருத்து கேட்காமல் நடவடிக்கை எடுத்துள்ளது.  

வேலூரில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், குறிப்பிட்ட வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக கோரியது. ஆனால் தேர்தலை ரத்து செய்துள்ளது. அதிமுக கூட்டணி வேட்பாளரின் வெற்றியை பறிக்கும் வகையில் உள்ளது” என்றார்.  
 

தலைப்புச்செய்திகள்